கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி தொடர்பில் பெற்றோர் வழங்கிய முறைப்பபாடு!

கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரத்தை அண்மித்த பகுதியில் வசித்து வந்த 15 அகவையுடைய சிறுமி ஒருவர் 17ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதும் குறித்த சிறுமி காணாமல்போனமை தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.